Friday, May 4, 2012

புயலுக்குப்பின்



புயல் கடந்ததன் மீட்சியா?
சிதறிய உறவுகளை
விளிக்கும் அழைப்பா?
வீடிழந்த சோகமா?
பசி தாகமா?
தங்கள் பாதைகளை
அடைத்துக்கொண்ட மழையீட்டிகள்
தைத்த சிறகுகள்
துவண்டுகிடக்கும் குளிரா?

புயல் அறைந்து அறைந்து
கடந்த பின்
எழுகின்ற இந்தப் பெயர் தெரியா
பறவையின் முதல் கூக்குரல்
விடுக்கும் சேதி
என்ன
வாகவும் இருக்கட்டும்

புவியை வன்கலவித்த புயல்
நகர்ந்தபின் இவ் வமைதியில்
இந்த முதல் கூக்குரல்
என்னுள் நிறைகிறது
மீண்டெழுதலின் திமிராய்
நம்பிக்கையின் துளிர்ப்பாய்
அழிவின்மையின் ஆணவமாய்

1 comment:

test said...

good news i am like it keep it up http://www.kollywoodthendral.in/